• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவுக்கான காரணத்தை கூறும் கஜதீபன்!

Editor1 by Editor1
January 31, 2023
in இலங்கைச் செய்திகள்
0
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவுக்கான காரணத்தை கூறும் கஜதீபன்!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தமைக்கு ரணிலின் பின்னணியில் இயங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு குழுதான் முழுக் காரணம் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குத்து விளக்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிடும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து, மல்லாகம் கிராம அபிவிருத்தி சபை மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
“அண்மையில் இரண்டு கூட்டங்களுக்காக வடமராட்சி பிரதேசங்களுக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள மக்கள் வீட்டுச் சின்னத்தை ஒரு சுயேச்சைக் குழு சின்னத்தைப் போல் நகைச்சுவையாகத்தான் பார்க்கின்றார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அங்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட பல கட்சிகள் கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தன. இப்படியான நிலைமையினால்தான் கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சறுக்கல் ஏற்பட்டது.

ஆனால், மாவை சேனாதிராஜா போன்ற தலைவர்களால் வலிகாமம் வடக்கு உள்ளிட்ட பகுதிகள், கிளிநொச்சி பகுதிகளிலேயே ஓரளவு வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தன.

அப்படியான மாவை சேனாதிராஜா போன்ற தலைவர்கள் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து ஒதுங்கியிருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தமைக்கு, ரணிலின் பின்னணியில் இயங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு குழுதான் முழுக் காரணம்.

அவர்கள் 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த குழுவினர்தான் தமிழரசுக் கட்சிக்குள் முக்கிய பொறுப்புக்கு வந்து, கட்சியையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் குழுவினர்தான், கடந்த பொதுத்தேர்தலில் மாவை சேனாதிராஜாவைத் தோற்கடித்தவர்கள். இப்போது கட்சியை விட்டு ஒதுக்கியுள்ளனர். மாவை சேனாதிராஜாவைத் தோற்கடித்தவர்களை, தற்போது தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேற்ற முயற்சிப்பவர்களை மக்கள் தண்டிக்க வேண்டும்.

அரசியல் தீர்வுக்கான நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு தரப்பு முடிவெடுத்து, வெற்றியடைந்துள்ளது.

சுதந்திர தினத்துக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்
தமிழ் மக்களுக்கு எதையும் செய்யாமல் தப்பிக்க, ரணில் அரசுதான் பின்னணியில் இருந்து இதனைச் செயற்படுத்தியது. இப்போது, சுதந்திர தினத்துக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாகத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது போலி நாடகம். கடந்த முறை ரணில் அரசுடன் கூடிக்குலாவிக் கொண்டிருந்து, குடும்பத்துடன் சென்று சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு, சிங்கக்கொடியை ஏந்திய தமிழரசுக் கட்சித் தலைவர்கள், இப்போது திடீரென ஞானம் வந்து, கறுப்புக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தேர்தல் வருவதே இந்த ஞானத்துக்குக் காரணம். தமிழ் மக்கள் மத்தியில் கே.வி.தவராசா போன்ற நல்ல சட்டத்தரணிகள் இருக்கிறார்கள். அவர்கள் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயங்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுகின்றார்கள்.

இன்னும் சில சட்டத்தரணிகள் பணத்துக்காகச் செயற்படுகின்றார்கள். அவர்கள் தமிழரசுக் கட்சிக்குள்ளும் இருக்கிறார்கள். நல்லாட்சி காலத்தில் ரணில் அரசுடன் நெருக்கமாக இருந்து, கொழும்பு துறைமுக நகர ஒப்பந்த தயாரிப்பில் ஈடுபட்டு, பெருந்தொகை பணத்தைப் பெற்ற நமது சட்டத்தரணிகள் பற்றிய விவரங்களையும் நாங்கள் பகிரங்கப்படுத்துவோம்.

தமிழரசுக் கட்சியின் பிரமுகரான சட்டத்தரணி ஒருவர், ரணில் அரசுடன் வெளிப்படையாகவும், கோட்டா அரசில் மறைமுகமாகவும் டீல் பேசி நிறைய பணம் பெற்றிருந்தார்.

அவரை நெருக்கமாகக் கவனித்தீர்கள் என்றால், எப்பொழுதும் வலது கையை மேசைக்கு கீழே வைத்திருந்து பெருவிரல், சுட்டு விரல், நடுவிரலை உரசியபடியே இருப்பார். அது பணம் வாங்கி பழகிய பழக்க தோசம்”என்றார்.

Previous Post

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சவூதி அரேபியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை

Next Post

யாழ் வந்தார் றிசாட் பதியுதீன்

Editor1

Editor1

Related Posts

யாழில் கச்சான் வாங்க சென்ற பெண்ணை புகைப்படம் எடுத்ததில் முரண்பாடு!
இலங்கைச் செய்திகள்

யாழில் கச்சான் வாங்க சென்ற பெண்ணை புகைப்படம் எடுத்ததில் முரண்பாடு!

March 28, 2023
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
இலங்கைச் செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

March 28, 2023
தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த நபர்
இலங்கைச் செய்திகள்

தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த நபர்

March 28, 2023
சிறுவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கைச் செய்திகள்

சிறுவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

March 28, 2023
காலநிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு!
இலங்கைச் செய்திகள்

காலநிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு!

March 28, 2023
முதன் முறையாக இலங்கை வந்தடைந்த உலகின் அதி நவீன விமானம்
இலங்கைச் செய்திகள்

முதன் முறையாக இலங்கை வந்தடைந்த உலகின் அதி நவீன விமானம்

March 28, 2023
Next Post
யாழ் வந்தார்  றிசாட் பதியுதீன்

யாழ் வந்தார் றிசாட் பதியுதீன்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

September 27, 2022
6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

July 21, 2022
தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

October 28, 2022
எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

July 16, 2022
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
யாழில் கச்சான் வாங்க சென்ற பெண்ணை புகைப்படம் எடுத்ததில் முரண்பாடு!

யாழில் கச்சான் வாங்க சென்ற பெண்ணை புகைப்படம் எடுத்ததில் முரண்பாடு!

March 28, 2023
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

March 28, 2023
கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் கரும்பு சாறு

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் கரும்பு சாறு

March 28, 2023
தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த நபர்

தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த நபர்

March 28, 2023

Recent News

யாழில் கச்சான் வாங்க சென்ற பெண்ணை புகைப்படம் எடுத்ததில் முரண்பாடு!

யாழில் கச்சான் வாங்க சென்ற பெண்ணை புகைப்படம் எடுத்ததில் முரண்பாடு!

March 28, 2023
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

March 28, 2023
கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் கரும்பு சாறு

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் கரும்பு சாறு

March 28, 2023
தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த நபர்

தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த நபர்

March 28, 2023
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy