உணவில் சேர்க்கும் உப்பானது நமக்கு சக்தியை தருவதோடு நோயையும் தருகிறது. இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் முதல் உடல் பருமன் ஆனாவர்கள் என பலர் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எனவே பெரும்பாலான மக்கள் உண்ணும் உப்பின் அளவு குறித்து கவனம் செலுத்துகிறார்கள். உப்பு குறைத்து சாப்பிடுவதால் உடலில் என்ன விளைவு ஏற்படும்.
விளைவு
உணவில் உப்பை குறைத்த பிறகு உடலில் தெரியும் மாற்றங்கள்
உணவில் உப்பைக் குறைத்தால் அதன் எதிரொலி உடல் ஆரோக்கியத்தில் தாக்கம் செய்யும். அந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என கூறப்படுகிறது.
எலக்ட்ரோலைட் சத்து
உப்பு நம் ஆரோக்கியத்திற்கு மோசமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் உப்பில் ஒரு முக்கியமான எலக்ட்ரோலைட் உள்ளது. இது நம் உடல் சாதாரணமாக செயல்பட உதவுகிறது. அதனால்தான் உப்பை உணவில் இருந்து முழுமையாக விலக்காதீர்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து தயாரிக்கப்படும் பானம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாகுவதை தூண்டுகிறது,
இதனால் உணவு நன்கு செரிமானம் அடைகிறது.இந்த பானம் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.ஆனால் இதில் உப்பு இல்லாமலும் குடிக்கலாம். எலுமிச்சை பழம் மட்டுமே போதுமானது.
சிறுநீரகத்தில் பிரச்சனை.
உணவில் இருந்து உப்பை விலக்கினால், அல்லது மிகவும் குறைந்த அளவு எடுத்துக் கொண்டால் அதன் விளைவு சிறுநீரகத்திலும் எதிரொலிக்கும்..
இது இரத்த அழுத்தத்தில் மட்டுமல்ல, உடலில் சேரும் சோடியத்தின் அளவையும் நேரடியாகப் பாதிக்கிறது.
அத்தகைய சூழ்நிலையில் உப்பு உட்கொள்ளவில்லை என்றால் பிரச்சனை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள்.
எடை குறைவு
உப்பு சாப்பிடுவதை நிறுத்தினால் உடனடியாக எடை சில கிலோக்கள் குறையும். ஒருவேளை அது தண்ணீரின் எடையைக் குறைக்கிறது.
ஏனென்றால் சோடியம் உட்கொள்ளலைக் குறைக்கும்போது எடை குறைகிறது என்று மகிழ்ச்சியடைவதோடு, உடலில் உள்ள சோடியம் அளவை பராமரிப்பதை அலட்சியப்படுத்தாதீர்கள்.
உப்பு சாப்பிடுவதை நிறுத்தி உடல் எடையை குறைப்பவர்கள் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுத்திகிறது.