பச்சை கொத்தமல்லி உணவின் மணத்தையும் சுவையையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் வியக்கத் தக்க வகையில் நன்மை பயக்கும்.
இதைப் பயன்படுத்துவதன் மூலம் பல வகையான நோய்களில் இருந்து விடுபடலாம். இதுமட்டுமின்றி பச்சை கொத்தமல்லியில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.
இது ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த மருந்திற்கும் குறையாதது. இது தவிர சிறுநீரக நோயாளிகளுக்கு பச்சை கொத்தமல்லி சிறப்பான முறையில் செயல்படுகிறது.
உண்மையில் பச்சை கொத்தமல்லி சிறுநீரகத்தை சிறப்பாக சுத்தம் செய்து அதன் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
சிறுநீரக ஆரோக்கியம்
நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதில் சிறுநீரகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்கள் இதனை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது.
அத்தோடு சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக பச்சை கொத்தமல்லி சாப்பிட வேண்டும். ஆனால் அதற்கு முன் பச்சை கொத்தமல்லியை சரியான முறையில் சாப்பிடுவது மற்றும் அதன் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நச்சுக்களை நீக்கும் ஜூஸ்
கொத்தமல்லி தண்ணீர் சிறுநீரக நச்சுக்களை நீக்கி நோய்களை களைக்கிறது. பச்சை கொத்தமல்லி கிரியேட்டினின் அளவைக் குறைக்கிறது.
அதே போல் இரத்தத்தில் சீரம் யூரியா மற்றும் யூரியா நைட்ரஜனையும் குறைக்கிறது. இது தவிர கொத்தமல்லியில் கொரியாண்ட்ரம் சாடிவம் (Coriandrum sativum) என்ற சாறு உள்ளது.
இது சிறுநீரகத்தின் ஹிஸ்டாலஜிக்கல் புண்களை குணப்படுத்துகிறது. இது மட்டுமின்றி இது ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிஃபீனால்களுடன் நெஃப்ரோப்ரோடெக்டிவ் பைட்டோகெமிக்கல் செயல்பாடுகளை ஊக்குவித்து சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.
கொத்தமல்லி நீர் தயாரிக்கும் முறை:
ஒரு கொத்தமல்லி கட்டை எடுத்து நன்றாக அதன் இலைகளை அலசி கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இலைகளை பொடிப்பொடியாக நறுக்கி சுத்தமான தண்ணீரை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து பின் ஆற விடுங்கள்.
பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி அதில் லெமன் ஜூஸை பிழிந்து ஒரு நாளைக்கு ஒரு முறை என குடித்து வந்தாலே போதும் சிறுநீரக பிரச்சனைகளை பெருமளவில் குறைத்து விடும் என்கின்றனர் நிபுணர்கள்.