பாலத்திற்கு கீழ் இருந்து 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்று எல்ல பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இராவணெல்ல நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் நேற்று மாலை (19.04) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.