பண்டாரவளை – ஹப்புத்தளை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபரை நீக்குமாறு கோரி பெற்றோர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த அதிபர் தங்களது பிள்ளைகளை தாக்கியதாக தெரிவித்து, நேற்று மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்ப்பில் ஈடுபட்ட பெற்றோர்
இதன்போது அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என எதிர்ப்பில் ஈடுபட்ட பெற்றோர் தெரிவித்தனர்.
அதேவேளை அதிபர் அந்த பாடசாலையில் கடமைகளை பொறுப்பேற்று 4 மாதங்களே கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விடயம் தொடர்பில் தாம் வலய கல்வி பணிப்பாளருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அத்துடன், முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.