தெய்வீக சக்திகளை வீட்டிலேயே நிறைவுற செய்யவும் அதன் சக்திகளை அதிகப்படுத்தவும் அபிஷேகம் அவசியமான ஒன்றாகும்.
வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் அபிஷேகம் செய்யலாம். பெரியவர்களால் முடியாத பட்சத்தில் குழந்தைகளும் அபிஷேகம் செய்யலாம்.
அபிஷேகங்கள் செய்வது ஏன் ?
கோவிலாக இருந்தாலும் சரி வீடாக இருந்தாலும் சரி சுவாமி விக்ரகம் இருந்தால் கண்டிப்பாக அபிஷேகம், நைவேத்தியம், பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் நியதி.
அபிஷேகம்
தான தர்மம் என்பது நாம் செய்த பாவங்களை போக்கிக் கொள்ள செய்வது. அவற்றோடு சுவாமிகளுக்கு செய்ய வேண்டியவை நமது கடமைகளாக சொல்லப்பட்டுள்ளது.
கோவில்களிலும், வீடுகளிலும் வைத்திருக்கும் சுவாமி சிலை கல்லால் ஆனதாக இருந்தாலும் உலோகத்தால் ஆனதாக இருந்தாலும் அவற்றில் உள்ள தெய்வீக சக்தியை அதிலேயே தங்க வைப்பதற்காகவும், அந்த சக்தியை முழுமை பெற செய்வதற்காகவும் அபிஷேகம் செய்வது என்பது அவசியமாகும்.
வீட்டில் அபிஷேகம்
அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கிக் கொடுக்காவிட்டாலும் அபிஷேகத்தில் கலந்து கொண்டு நேரில் தரிசிக்காவிட்டாலும் அபிஷேகம் நடக்கும் சமயத்தில் கோவிலுக்குள் இருந்தாலும் கூட பல மடங்கு நன்மை கிடைக்கும்.
அபிஷேகத்தின் போது விக்ரஹத்தில் இருந்து வெளிப்படும் தெய்வீக சக்தியானது கோவில் முழுவதும் நிறைந்திருக்கும்.
இதில் நேர்மறை சக்தியை நீக்கி, எதிர்மறை ஆற்றல்களை உண்டாக்கும் தன்மை கொண்டது.
இந்த தெய்வீக சக்தியுடன் நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியிலேயே முடியும்.
இதே போல் வீட்டில் வைத்திருக்கும் தெய்வ சிலைகளுக்கு தினமும் அபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமானது.
அப்படி முடியாதவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும்.
அபிஷேகம் செய்யாமல் வீட்டில் சுவாமி சிலைகள் வைத்திருப்பது மிகப் பெரிய பாவமாகும்.
உதாரணமாக, விநாயகர் விக்ரஹம் இருந்தால் சதுர்த்தி திதியில் மட்டுமாவது அபிஷேகம் செய்யலாம்.
முருகன் விக்ரஹமாக இருந்தால் சஷ்டி அன்று மட்டுமாவது அபிஷேகம் செய்ய வேண்டும்.
அபிஷேகம் செய்யும் முறை
அபிஷேகம் செய்வதற்கு முன் எண்ணெய் காப்பு அல்லது தைலக்காப்பு இட வேண்டும்.
கருங்கல்லால் ஆன விக்ரஹமாக இருந்தால் முதலில் நல்லெண்ணெய் சிறிது இட்டு எண்ணெய் காப்பு இட வேண்டும்.
ஒரு 10 நிமிடங்கள் கழித்து அபிஷேகத்தை துவக்க வேண்டும். கோவில்களில் முதல் அபிஷேகமாக பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்வார்கள்.
வீட்டில் பஞ்சகவ்யம் செய்வது கஷ்டம். அதனால் சுத்தமான தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
பிறகு பச்சரிசி மாவு, சந்தனம் அல்லது வாசனை திரவியப் பொடி, தேன், மஞ்சள், பால், தயிர் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
5 அல்லது 16 வகை பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். எதுவும் முடியாதவர்கள் வெறும் தண்ணீர் மட்டும் வைத்தாவது அபிஷேகம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும், சந்தனம், குங்குமம், பூ வைத்து, ஏதாவது ஒரு நைவேத்தியம் படைக்க வேண்டும்.
எளிமையாக உலர் திராட்சை, கற்கண்டு, சர்க்கரை கூட நைவேத்தியமாக படைத்து தீபாராதனை காட்ட வேண்டும்.
பிறகு சுத்தமான தண்ணீர் ஊற்றி அந்த அபிஷேக பொருளை நீக்கி விட்டு, அடுத்த அபிஷேகத்தை செய்ய வேண்டும்.