நில்வள கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குறித்த ஆற்றை அண்டியுள்ள சில பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வள கங்கை தற்போது நிரம்பி வழிகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் (14.05.2023) காலை நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதன்படி, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேசங்களில் நில்வள கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.