பேலியகொடை – புளுகஹ சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டமையினால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அவரின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.