இலங்கையில் இன்று (13) முதல் கொப்பிகள், காகிதப் பொருட்கள் உட்பட சகல பாடசாலை உபகரணங்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பொருட்களின் விலைகளை 20% முதல் 25% வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ரூபாவின் பெறுமதி வலுவடைவதைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடனுதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு மற்றும் வங்கி வட்டி குறைப்பு காரணமாக இந்த பொருட்களின் விலை அடுத்த மாதத்தில் 35% முதல் 40% வரை குறையலாம்.



















