யாழ்ப்பாணத்தில் இரண்டு வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட முவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மற்றொரு தொகுதி நகை மன்னார் மற்றும் திருகோணமலை பகுதிகளில் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த மார்ச் மாதம் 05ஆம் திகதி யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவில் அதிகாலை வேளை ஆட்கள் இல்லாத நேரம் வீட்டை உடைத்து ஐந்து கால் பவுண் நகைகளை கொள்ளையிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் முதலாம் திகதி மற்றொரு வீட்டில் ஆட்கள் இல்லாத போது 13 பவுண் நகைகளை திருடியமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளுக்கு அமைய, முதன்மை சந்தேகநபரான திருநெல்வேலியைச் சேர்ந்த 22 வயதுடையவரையும் நகைகயை வாங்கி உருக்கிய ஒருவரையும் உடந்தையாக இருந்த பெண் என 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.