கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி அ.த.க பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே இன்று (20.1.2024) குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸார் விசாரணை
குறித்த நபர் மது போதையில் இருந்த நிலையில் நேற்று (19.1.2023) மாலை 7 மணியளவில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று (20.1.2024) காலை குறித்த நபர் சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளின் பின்னர் குற்றதடுப்பு பொலிஸார் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அண்மை நாட்களாக இளைஞர்களின் உயிர் இழப்புக்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.