புத்தளம் பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கடந்த (23.02.2024) ஆம் திகதி புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி இடைநிறுத்தம் செய்தார்.
கற்பிட்டி – அந்தாங்கண்ணி பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
கடந்த (22.02.2024) ஆம் திகதி மாலை ஏத்தாலை – ஆங்குடா பிரதேசத்தில் இரகசிய இடத்தில் சிலர் கஞ்சா குடிப்பதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பிரகாரம் 7 சந்தேகநபர்கள் நுரைச்சோலை பொலிஸ் அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரிடம் சோதனை நடத்திய அதிகாரிகள் 1,200 மில்லி கிராம் கஞ்சாவை கண்டுபிடித்தனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 7 சந்தேக நபர்களும் (23.02.2024) ஆம் திகதி மாலை கற்பிட்டி பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து சந்தேகநபர்கள் 1 இலட்சம் ரூபா பெறுமதியான தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.