இந்தியாவில் சரக்கு தொடருந்து ஒன்று சாரதியின்றி பயணித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இவ்வாறு சாரதி இல்லாமல் சரக்கு தொடருந்து ஓடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
100 கிலோ மீற்றர் வேகம்
ஜம்மு காஷ்மீர்-கதுவா தொடருந்து நிலையத்தில் சரக்கு தொடருந்தின் ஹேண்ட் பிரேக் போடாமல் சாரதி இயந்திரத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
அப்போது தொடருந்து தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு தொடருந்து பதான்கோட் நோக்கி சுமார் 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அந்த சரக்கு தொடருந்து சாரதியின்றி சுமார் 70 கிலோ மீற்றர் தூரம் பயணித்துள்ளது.
விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த தொடருந்து சாரதி மற்றும் ஊழியர்கள் தொடருந்தை நிறுத்த முடியாமல் தவித்துள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு தொடருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
A Freight Train was standing at Kathua Station in Jammu.
Suddenly, it started running WITHOUT the PILOT 😵
Train drove for 80+ kms WITHOUT any DRIVER.
Train was stopped near Ucchi Bassi in Mukerian, Punjab.
Now,@RailMinIndia has initiated an inquiry.pic.twitter.com/AkE13dDnVj
— Shashank Shekhar Jha (@shashank_ssj) February 25, 2024




















