பசில் ராஜபக்ச அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து வரவுள்ளதாக ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக பசில் ராஜபக்ஷ களமிறங்குவார் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை அல்ல பாராளுமன்ற தேர்தலே முதலில் நடத்தப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ஆம் திகதி பசில் ராஜபக்ச இலங்கை வரும் போது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படும் என்றும், வாகன அணிவகுப்பு அவரை கொழும்புக்கு அழைத்து வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















