நாட்டில் மூன்று இடங்களில் மூவர் கொல்லைப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திப்பட்டுவாகம விகாரைக்கு செல்லும் வழியில் கத்தி மற்றும் கத்தரிக்கோலால் குத்தப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக 37 வயதுடைய ஒருவரே நேற்று (14) கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஹக்மன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹட்டகஹகொரட்டுவ பகுதியில் இன்று (15) அதிகாலை 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் சேருநுவர, மஹாவெலிகம பிரதேசத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.