கொழும்பு, புறக்கோட்டையில் மனித பாவனைக்குப் பொருத்தமற்ற சுமார் ஒரு டன் பருப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புறக்கோட்டையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் நேற்று (13-08-2024) இடம்பெற்ற சோதனையில் மனித பாவனைக்குப் பொருத்தமற்ற குறித்த பருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த களஞ்சியசாலையுடன் தொடர்புடைய வர்த்தகர், பருப்பை மீளப் பதப்படுத்தி சந்தைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.