யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வளர்ப்பு நாய்க்கு இறுதி சடங்கு செய்த சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் யாழ். வட்டுக்கோட்டை – மாவடி பகுதியில் இன்றையதினம் (15-09-2024) இடம்பெற்றுள்ளது.
இறுதிச் சடங்கினை செய்த உரிமையாளர் கடந்த 10 ஆண்டுகளாக பைசாவினை வளர்த்து வந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக தனக்கு பாதுகாப்பினை வழங்கிய நன்றிக் கடனுக்காக மனிதர்களுக்கு செய்கின்ற இறுதிச் சடங்கு போல பைசாவுக்கும் இறுதிச் சடங்கினை நடாத்தி நெகிழ வைத்துள்ளார்.
‘பான்ட்’ வாத்தியங்கள் முழங்க, பைசாவின் உடலம் வட்டுக்கோட்டை பகுதி எங்கும் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அதன்பின்னர் பைசாவின் எஜமானின் காணியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.