கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டவிரோத பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்த பயணியை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு – 13 பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான UL-226 இல் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120,400 சிகரெட்டுகள் அடங்கிய 602 அட்டைப்பெட்டிகளை கண்டுபிடித்துள்ளனர்.