அம்பாரை – கல்முனை வீதியில் மாவடிப்பள்ளி பெரியபள்ளி வாசலுக்கு முன்பாக இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் பயணித்துக் கொண்டிருந்த சிறுமியின் மீது தனியார் போக்குவரத்து பஸ் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் சம்மாந்துறையை சேர்ந்த சிறுமி ஒருவரே மரணமடைந்துள்ளார். இந்த விபத்து நடந்தவுடன் குறித்த பஸ்ஸின் சாரதி விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
தற்போது பஸ் சாரதி காரைதீவு பொலிஸில் சரணடைந்துள்ள காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்