ஒல்லாந்தர் காலத்து VOC எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய முயன்ற கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரொருவர் இன்று (17) ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்த கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை 20 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
கேடயம் மற்றும் இரண்டு நாணயங்கள் தனக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை சந்தேக நபர் இதுவரை கூறவில்லை.
இந்த நிலையில் பொருட்களின் தொல்பொருள் பெறுமதியை அறிந்துகொள்ள இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (17) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
VOC என்பது ஒல்லாந்தர் கால “கிழக்கிந்திய கம்பனி” எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும் என்பதுடன், இந்நாணயம் 1732ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.