கினிகத்தேன நகரில் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்ததில், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று (18) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மாணவர்கள், கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (18) காலை, கினிகத்ஹேன நகருக்கு பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள இந்த மாணவர்கள், உணவு அருந்துவதற்காக உணவகமொன்றுக்கு சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.