• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

நாட்டில் பலவீனமான அரசாங்கமே காணப்படுகின்றது!

Editor1 by Editor1
February 15, 2025
in இலங்கைச் செய்திகள்
0
நாட்டில் பலவீனமான அரசாங்கமே காணப்படுகின்றது!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

வலுவான அரசாங்கத்திற்கு பதிலாக, வரலாற்றில் மிகவும் தோன்றிய மிகவும் பலவீனமான அரசாங்கமே இங்கு காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று வெள்ளிககிழமை (14) நடைபெற்ற கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வு மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் தொகுதி அமைப்பாளர் நியமணப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு என்பவற்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

10 பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தமது வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது. அவை மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். இன்று, நாடு பயணிக்கும் பாதை தெளிவாக தெரிகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வெளிப்படையான கொள்முதல் முறைகளின்படி இடம்பெற வேண்டும்.

முதலீட்டாளர்களை அரசாங்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். 2028 ஆம் ஆண்டளவில் நாம் கடனைச் செலுத்த வேண்டும் என்பதால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் .

நாடு செலுத்த வேண்டிய கடனையும் வட்டியையும் செலுத்த வேண்டுமானால் அரசு அதிக வருமானத்தையும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இலக்குகளையும் அடைய வேண்டும். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஒரு நாடாக எம்மால் மீண்டு வர முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இவ்வாறே சென்றால் இன்னுமொரு கடன் மறுசீரமைப்பிற்குச் செல்ல வேண்டி வரும்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட இணக்கப்பாடு மற்றும் சர்வதேச பிணை முறி பத்திரதாரர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து ஆராயும் பொருளாதார வல்லுநர்கள், அவர்களுடன் செய்து கொண்டுள்ள இணக்கப்பாடுகளின் இலக்குகளை நாம் அடையாவிட்டால், மற்றொரு கடன் மறுசீரமைப்பிற்கு செல்ல வேண்டியிருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த இணக்கப்பாடுகளில் காணப்படும் பலவீனங்களை ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியதுடன் கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை இந்த அரசாங்கமும் முன்னெடுத்து வருகிறது.

பல நிபுணர்கள் IMF ஒப்பந்தங்களை ஆய்வு செய்துள்ளனர். அவர்களது பகுப்பாய்வுகளின் பிரகாரம், IMF உடன்படிக்கைக்கு வந்த 59% நாடுகள் இரண்டாவது அல்லது மூன்றாவது மறுசீரமைப்புக்கு சென்றுள்ளன என வெளிப்படுத்தியுள்ளனர். இது இங்கு வெளிப்படுத்தப்படுவதில்லை.

மற்றொரு கடன் மறுசீரமைப்பை நாடுவது நாட்டிற்கு ஒரு பேரழிவாகும். குறுகிய பிரச்சினைகளை இலக்கு வைத்து ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் ஆதாயம் தேடாது.

நாடு குறித்து சிந்தித்தே செயற்பட்டு வருகிறோம். இந்தத் தரவுகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாம் தயார்.

2020 பெப்ரவரியில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக ஆரம்பிக்கப்பட்டது. 7 மாதங்களுக்குப் பிறகு, நாம் ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டோம்.

சுதந்திர ஜனநாயக வரலாற்றில் குறுகிய காலத்தில் ஒரு கட்சியாகப் போட்டியிட்டு அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களையும் வாக்குகளையும் வென்றெடுத்தோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டோம். தற்போது உள்ளூராட்சித் தேர்தல் வந்துள்ளது. இதனை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒரு தற்காலிக கூட்டணி அல்ல.

கட்சிக்கென்று எந்த உறுப்பினர்களும் இல்லாதே கடந்த மூன்று தேர்தல்களிலும் எமது கட்சி பேட்டியிட்டது. அப்போது இருந்த ஐ.தே.க உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மிகுந்த நம்பிக்கையோடு ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தனர்.

அவர்களில் 74 பேர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பதவி பறிக்கப்படது. ஐக்கிய மக்கள் சக்தியினது அல்லது தொலைபேசி சின்னத்தினது பயணமென்பது தற்காலிகமான பயணமல்ல, இது நெடுதூர பயணமென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Previous Post

பொலிசாரின் சுற்றிவளைப்பில் 30,000க்கும் மேற்ப்பட்ட சந்தேக நபர்கள் கைது!

Next Post

E-Passport குறித்து வெளியான தகவல்!

Editor1

Editor1

Related Posts

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்
இலங்கைச் செய்திகள்

லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

December 5, 2025
இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு
இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

December 5, 2025
யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை
இலங்கைச் செய்திகள்

யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

December 5, 2025
வரலாற்றில் பொறிக்கப்படவுள்ள உயிரிழந்த விமானப்படை அதிகாரியின் பெயர்! அநுர உறுதி
இலங்கைச் செய்திகள்

வரலாற்றில் பொறிக்கப்படவுள்ள உயிரிழந்த விமானப்படை அதிகாரியின் பெயர்! அநுர உறுதி

December 5, 2025
யாழ். பழைய பூங்காவில் முளைக்கும் உள்ளக விளையாட்டு அரங்கு – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இலங்கைச் செய்திகள்

யாழ். பழைய பூங்காவில் முளைக்கும் உள்ளக விளையாட்டு அரங்கு – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

December 5, 2025
Next Post
E-Passport குறித்து வெளியான தகவல்!

E-Passport குறித்து வெளியான தகவல்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

December 5, 2025
இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

December 5, 2025
யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

December 5, 2025

Recent News

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

December 5, 2025
இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

December 5, 2025
யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

December 5, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy