பொதுவாகவே இவ்வுகில் பல்வேறு நாடுகளில் வாழும் மக்களும் வெவ்வேறு வகையான உணவு பழக்கம், கலாசாரம், மொழி, மதம் என்பவற்றை பின்பற்றுகின்றார்கள்.
குறிப்பாக உணவு முறை என்று மட்டும் எடுத்துக்கொண்டாலே, சைவ உணவுகளை மட்டும் உண்ணுபவர்கள், அசைவ விரும்பிகள் , வீகன் உணவு முறையை கடைப்பிடிப்பவர்கள், என பல வகையில் பிரிவுகள் காணப்படுகின்றது.
ஆனால் உலகில் ஒரே ஒரு நகர்த்தில் மட்டும் அசைவம் சாப்பிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று சொன்னால் நம்ப முடிகின்றதா?
என்ன காரணம்?
ஆம் குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரம் அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரம் என்ற வரலாறு படைத்துள்ளது.
அந்த நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை மூடுமாறு கோரி 200க்கும் மேற்பட்ட சமண துறவிகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்த முடிவு பெறப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாலிதானா நகரம் அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரமாக அறியப்படுகின்றது.
அவ்வாறான முடிவு எட்டப்பட முக்கிய காரணம் இப்பகுதியில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மத மாற்றத்தைக் குறிக்கிறது.
இது சமணத்தின் வலுவான செல்வாக்கையும் அதன் கொள்கைகளையும் பிரதிபலிப்பதன் காரணமாகவும் சமண துறவிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இங்கு அசைவ உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.