கம்பஹா – பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் பமுனுகம பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கணேமுல்ல பகுதியில் வசிக்கும் 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 7,500 லீற்றர் (1,000 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.