ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து, அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பரப்பிய , பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆவார்.
சந்தேகநபரான கான்ஸ்டபிள், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சிறிது காலமாக உறவு வைத்திருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதன்போது சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் சந்தேகநபரின் தொலைபேசியிலிருந்து அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.