கைலாசா சாமியார் நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக கைலாசாவின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நித்தியானந்தா இன்று நேரலையில் தோன்றுவார் என்றும் கைலாசா சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைலாசா என்ற அதிகாரி, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட விளக்கத்தில்,
சில ஊடகங்கள், உச்ச இந்து பீடாதிபதி நித்தியானந்தா தமது இயற்கை வாழ்வை விட்டுவிட்டார் என்று தவறான, திட்டமிட்ட மற்றும் துயரமான தகவல்களை பரப்பியுள்ளனர்.
BREAKING NEWS : நேரலையில் பகவான் நித்யானந்த பரமசிவம்!
பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்மீது தொடுக்கப்பட்ட வதந்திகள் உலகம் முழுவதும் கேள்விகளையும், ஊகங்களையும், உண்மையை அறிய கூர்ந்த ஆர்வவத்தையும் எழுப்பி உள்ளது.
இனிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி 7PM ET அன்று, பகவான் நித்யானந்த… pic.twitter.com/Cc6Gd6lfb2
— KAILASA’s SPH NITHYANANDA (@SriNithyananda) April 2, 2025