குருணாகல் – ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திவுல்வெவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை (03) மாலை இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி ஒன்று வீதியில் பயணித்த மூதாட்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த மூதாட்டி குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய மூதாட்டி ஆவார்.
இதனையடுத்து, லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















