தந்தை மகனுக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் முச்சக்கர வண்டியொன்று எரிந்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (07) இரவு மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.