ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை வியாழக்கிழமை (10) அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள புதிய வரி தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.