தெற்கு அதிவேக வீதியில் காலி நோக்கி செல்லும் வீதியில் இன்று (14) காலை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கௌனிகம மற்றும் தொடங்கொட சந்திப்புகளுக்கு அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.