கொழும்பில் இன்று இன்று (23) அதிகாலை முதல் பெய்த கடும் மழையினால் பொரள்ளை பகுதியில் பாரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து வீழ்ந்துள்ளது.
பாரிய மரம் வேரோடு சரிந்து வீழ்ந்தில் அவ்வழியாக சென்ற 7 வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, கொழும்பு வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் கொழும்பு மாநகர சபையும் தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















