பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 19ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் மீது தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசபந்து தென்னகோனை விசாரணை நடவடிக்கைகளுக்காக முன்னிலையாகுமாறு குறித்த குழு அழைப்பு விடுத்துள்ளது.



















