திருகோணமலையில் சுட்டக்கோழி (பார்பிக்யூ) இறைச்சி உணவு ஒவ்வாமையால் 10 பெண்கள் 06 ஆண்கள் சிறுவர்கள் 03 பேரும் என 19 பேர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று மூதூர் வைத்தியசாலையில் மூவரும் நிலாவெளியில் இருவரும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
செவ்வாய்க்கிழமை (22)அதிகாலை 4.மணியிலிருந்து வயிற்றோட்டம், வாந்தி, அதிக உஷ்ணத்துடனான காய்ச்சல் போன்ற உபாதைகளால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோயாளிகளிடம் விசாரணைகள் செய்த போது அவர்கள் அனைவரும் சுட்ட கோழி இறைச்சியுடன் இரவு உணவை சாப்பிட்டதாகவும் அந்த உணவை ஒரே கடையில் வாங்கியதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் அவர்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டமைக்கு பார்பிக்யூ உணவு தான் காரணம் என வைத்தியர்களின் அறிக்கைகள் மற்றும் பரிசோதனைகள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டால் அவ் உணவுகளை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.



















