காவல்துறைத் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சதீஸ் கமகே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் சதீஸ் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதிச் சலவை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் காவல்துறை அத்தியட்சகர் சதீஸ் கமகே கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை திணைக்களத்தின் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளராக சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சதீஸ் கமகே கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் கைது செய்யப்பட்ட சதீஸ் கமகேவிடம் தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் மோசடிகள் தொடர்பிலான சில குற்றச்சாட்டுக்களை மையமாகக் கொண்டு இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



















