அம்பாறை மாவட்டத்தின் சிங்கள கிராமமான உகண பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செனரத்புர கிராமிய வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அருகிலுள்ள சிங்கள பாடசாலையொன்றிலுள்ள மாணவிகள் விளையாட்டு போட்டிற்காக மருத்துவ பரிசோதனை அறிக்கை பெறுவதற்கு குறித்த வைத்தியசாலைக்கு சென்று ECG ‘எடுத்துள்ளனர்.
இதன்போதுமாணவிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் அவர்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
உயிரை காப்பாற்றும் புனிதமான மருத்துவர் தொழிலை பயன்படுத்தி மிருகத்தை விட மிக கேவலமான முறையில் சிறுமிகளிடம் குறித்த வைத்தியர் நடந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவரின் தவறான தொடுகை தொடர்பில் கலங்கிய சிறுமிகள் அது தொடர்பில் தமது வகுப்பு ஆசிரியயையிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட குறித்த ஆசிரியை பாடசாலை அதிபரினூடாக சம்பவம் தொடர்பில் உகண பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டினை அடுத்து உகண பிரதேச செயலக சிறுவர் பிரிவு மற்றும் அம்பாறை நகர் சிறுவர் துஸ்பிரயோகத்தின் பொறுப்பான அதிகாரிகள் நேரடியாக சென்று மாணவிகளிடம் தகவல்களை பெற்றுள்ளனர்.
அதன்பின்னர் குறித்த வைத்தியர் கைதுசெய்யப்பட்டு அம்பாறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.