அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெற்ரோல் மற்றும் எண்ணெய்களின் விலை பாரியளவில் அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் செய்யும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் சுரங்க சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்படகூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானின் நெருக்கடி நீண்ட காலம் நீடித்தால் இலங்கையின் சுற்றுலா துறைக்கு பாரிய அழுத்தம் ஏற்பட கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்படவுள்ள ஆபத்து குறித்து இலங்கை முகங்கொடுப்பதற்கான மாற்றுவழிகளை இப்போதே கண்டுபிடிக்க வேண்டும் என பேராசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.