இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மகளை சீரழித்தவர்கள் மீதான புகாரை திரும்பப் பெற மறுத்த தாயாரை ஜாமீனில் வெளியே வந்த அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018 ஆம் ஆண்டில் சாந்த் பாபு, மிந்து, ஜமீல், மஹ்பூப், ஆபித் மற்றும் ஃபிரோஸ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் அவர்கள் 6 பேருக்கும் விரைவில் உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கடந்த வியாழக்கிழமை இந்த 6 பேரும் அந்தச் சிறுமி மற்றும் அவரது தாயாரின் வீட்டிற்குள் நுழைந்து தங்கள் மீதான கிரிமினல் வழக்கைத் திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்தினர்.
மறுத்த தாய் மற்றும் மகளையும் அந்த கும்பல் தாக்கி உள்ளது. பலத்த காயமடைந்த அந்தப் பெண்ணும் சிறுமியும் கான்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் சிறுமியின் தாய் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பில் குற்றவாளிகள் 3 பேரை மீண்டும் கைது செய்த பொலிசார் தப்பியோடிய ஒருவனைத் தேடி வருகின்றனர்.