ஈழப்போரில் அதிஉச்சமாக போர் இடம்பெற்ற வன்னிப்பகுதியின், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழீழம் கிடைத்த பெருமையுடன் லண்டனுக்கு சென்று புலம்பெயர் தமிழர்களுடன் குடி…கும்மாளத்ததுடன் அமோகமான விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த நல்லாட்சியில் அவர் பாராளமன்ற உறுப்பினராக அங்கம் வகித்தபோது இவர் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு, அதுவும் வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கரை ஆண்டுகள் பதவியில் இருந்தபோது என்ன செய்தார்? எதுவுமே இல்லை..
முன்னாள் அமைச்சர் ராஜிதவுடன் இணைந்து தனது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையினையும், தனது சொந்த தேவைகளையும் மட்டுமே வளர்த்தார். அதனை விடுத்து அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு சுண்டு விரலைகூட அசைக்கவில்லை.
தழிழரசுக்கட்சி தலைவரின் செல்லபிள்ளையான சிவமோகன் தனது வளர்ச்சிக்கு மட்டுமே அரசியலை பயன்படுத்தினாரே தவிர தமிழர்களுக்காக அல்ல…
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான எந்த ஒரு உதவியையோ அல்லது அவர்கள் சார்பான அறிக்கையையோ இவர் எப்பொழுதும் செய்ததே இல்லை.
பதவியிலிருந்த நான்கரை ஆண்டுகளில் ஒருதரமேனும் ஜெனிவாவிற்கு சென்று எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பிலோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாகவோ எந்த ஒரு அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை.
யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் எமது உறவுகள் வீதிகளில் போராடிக்கொண்டுஇருக்கின்றார்கள். மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தானே அரசியல்… அப்படி அதனை செய்யமுடியாத உங்களைப்போன்றவர்கள் ஏன் அரசியலுக்கு வருகின்றீர்கள்?
தமீழீழ விடுதலைபுலிகளின் ஆட்சிக்காலத்தில் கிளிநொச்சியில் இருந்து கட்டாயமாக இடம்மாற்றப்பட்டவர்தானே இவர் என்பது பலருக்கு மறந்துஇருக்காது.அதுமட்டுமா? இறுதியுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்டு நம்மவர்கள் வெளியில் வந்தபோது, அவர்களிடம் பணம்பெற்று வைத்தியம் செய்தவர்தானே நீங்கள்…பணம் மட்டும்தானே உங்களின் குறிக்கோளாக இருந்தது. அதனால் தான் நான்கரை ஆண்டுகள் பதிவியில் இருந்தும் எமது மக்களின் கண்ணீர் ஓலம் உங்களை எட்டவில்லை.
நீங்கள் பதவியில் இருந்தபோது எமது மக்களின் எந்த கோரிக்கையும் உங்கள் செவிக்கோ அல்லது கண்களுக்கோ எட்டவில்லை. அப்போது ஜெனீவா சென்று எதுவும் செய்யாத நீங்கள் இப்பொழுது லண்டன் சென்று எதற்காக புலம்பெயர் உறவுகளை சந்தித்துள்ளீர்கள்? உங்களை அங்கு அழைத்த நம் உறவுகளுக்காவது ஈழத்தின் அவலக்குரல் கேட்கின்றதா? பதவில் இருந்தபோது என்ன செய்தார் என கேளுங்கள்.
திருவாளர் சிவமோகன் அவர்களே உங்களிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம், தமிழ் மக்கள் சார்பில் நாடாளுமன்றம் சென்று நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், அல்லலுறும் எமது மக்களுக்கு எதுவும் செய்யாத உங்களை விமர்சிக்கும் முழு அதிகாரம் எமக்கு உள்ளது.