பதுளையிலிருந்து கண்டிக்கு பொருட்கள் ஏற்றிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதுண்ட தோட்டத் தொழிலாளியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தெமோதரைக்கும் எல்ல ரயில் நிலையத்திற்கும்இடைப்பட்ட பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
பதுளை– சவ்தம் பெருந்தோட்ட தொழிற்சாலைப் பிரிவைச் சேர்ந்த ஆறுமுகம் பேரின்பநாதன் என்ற 46 வயது நிரம்பிய தோட்டத்தொழிலாளியே ரயிலில் மோதுண்டு பலியானவராவார்.
குறித்ததொழிலாளி ரயில் பாதை வழியாக வீடுநோக்கிச் சென்று கொண்டிருந்த போதே பின்புறமாக வந்தரயிலில் மோதுண்டார்.
இதையடுத்து இச்சம்பவத்தில் பலியான தோட்டத் தொழிலாளியின் சடலம் எல்ல பொலிசாரினால் மீட்கப்பட்டு சட்ட வைத்திய பரிசோதனைக்காக தெமோதரை பிரதேச அரசினர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் குறித்து எல்லபொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.