ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன- களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 41 மாணவர்கள் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலை உணவை உட்கொண்ட பின்னர் மாணவர்களுக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டதாகவும் இதனால் 11 மாணவிகள் உள்ளடங்களாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்தப் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது, மாணவர்களுக்கு மாலு பணிஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனை உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளதாகத் கினிகத்தேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.