வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 97 கிலோ கேரளாக் கஞ்சாவை மீட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
வலவெட்டித்துறைக் கடற்ப்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர், சந்தேகத்துக்கு இடமான முறையில் கடலில் பொதிகள் மிதப்பதைக் கண்டுள்ளனர்.
கடலில் மிதந்த பொதிகளை மீட்டு பரிசோதனை செய்த போது, அதனுள் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
குறித்த கஞ்சாப் பொதிகளை காங்கேசந்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று முழுமையாகப் பரிசோதித்தபோது 97 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்துள்ளது.
குறித்த கஞ்சா பொதி இன்று மாலை, யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.