மீசாலை பகுதியில் துவிச்சக்கரவண்டியில் வந்த ஆசிரியை பாடசாலைக்குள் திரும்ப முற்பட்டபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
இந்த விபத்து இன்று காலை 07:25 மணியளவில் மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தின் முன்பாக இடம்பெற்றது.
விபத்தில் பாடசாலை ஆசிரியை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை நேரத்தில் பொலிஸார் கடமையில் இல்லாத சமயம் இந்த விபத்து இடம்பெற்றது எனவும், குறித்த பாடசாலைக்கு முன்பாக பொலிஸார் கிரமமாகக் கடமையில் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது