• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

மஹிந்தவிற்கு சி.வி.விக்னேஸ்வரன் பதிலடி

Editor by Editor
February 12, 2020
in இலங்கைச் செய்திகள்
0
மஹிந்தவிற்கு சி.வி.விக்னேஸ்வரன் பதிலடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிறநாடுகளில் பேசும் போது உண்மையை அறிந்து பேச வேண்டும். உள்நாட்டில் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்விக்கு பதலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

கேள்வி :- வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிடடார் என்றும் பிரதமர் மகிந்த இராஜபக்ச இந்தியாவில் கூறியுள்ளாரே. அது பற்றி உங்கள் கருத்து?

பதில் – “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக் குறை கூறி தனக்கு நற்பெயர் பெற்றுக்கொள்ள பார்க்கின்றாரா? அவர் உண்மையில் தெரியாமல் கூறினாரா அல்லது தெரிந்தும் எமக்கு மாசு கற்பிக்கக் கூறினாரா என்று தெரியவில்லை.

என்னுடைய 5 வருட பதவிக்காலத்தில் ஒரு சதத்தையேனும் நாம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை. முதலாவது, 2014ம் வருடத்தில் 12,000 மில்லியன் கேட்டோம். 1,650 மில்லியன் தான் தரப்பட்டது என்று நினைக்கின்றேன்.

அப்படி இருக்கையில் திருப்பி அனுப்ப காசு எங்கு இருக்கின்றது? அதன்பின் வந்த வருடங்களில் ஒரு வருடத்தில் மூவாயிரத்து சொச்சம் தருவதாகக் கூறி பகுதி பகுதியாகத் தான் தரப்பட்டது.

அதுவும் ஒரு பகுதி அடுத்த வருடத்தில் தரப்பட்டது. அந்தக் காரணத்தினால் எங்கள் செயற்றிட்டங்களும் பாதிக்கப்பட்டன. தாமதம் அடைந்தன.

நாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது.

ஆகவே பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது.

இரண்டாவது நாங்கள் உதாரணமாக 12,000 மில்லியன் கேட்டால் எமக்கு சுமார் பத்தில் ஒரு பங்கைத் தந்துவிட்டு மிகுதி அனைத்தையும் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கொடுத்து வந்துள்ளன.

அவர்கள் அந்தப் பணம் அனைத்தையும் வடக்கிற்குச் செலவிடுவதாக பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்துவார்கள்.

ஆனால் நடப்பது என்ன? அவர்களுக்குக் கிடைத்த பணம் அனைத்தையும் வடகிழக்கு மாகாணத்திற்கு அனுப்புகின்றார்களோ என்பது ஒரு புறம் இருக்க அனுப்பப்படும் பணம் எமக்கு அனுப்பப்படுவதில்லை. அரசாங்க அதிபர்களுக்கே அனுப்புகின்றார்கள்.

அவர்கள் பலர் பணத்தைத் திருப்பி அனுப்புகின்றார்கள் என்று கேள்வி.

ஒருவேளை பணத்தைத் திருப்பி அனுப்புவதால் மத்தியின் கடைக்கண் பார்வை தமக்குக் கிடைக்கும் என்று அவர்கள் அவ்வாறு அனுப்புகின்றார்களோ அல்லது வேறு காரணங்களுக்காகத் திருப்பி அனுப்புகின்றார்களோ என்பது பற்றி அவர்களே எமக்கு அறிவுறுத்த வேண்டும்.

பிரதமர் பிறநாடுகளில் பேசும் போது உண்மையை அறிந்து பேச வேண்டும். உள்நாட்டில் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது.

மூன்றாவதாக பிரதமருக்கு 1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டம் பற்றித் தெரியுமோ என்று எனக்குத் தெரியவில்லை. அதன்படி 13வது திருத்தச் சட்டத்தில் எமக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த அதிகாரப் பகிர்வில் மத்திய அரசாங்கம் தமக்கென ஒரு அதிகாரப் பகிர்வொன்றை மேற்கொண்டுள்ளது.

அதாவது தந்த அதிகாரத்திலும் பாதிக்குமேல் குறித்த இந்த சட்டத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் எம்மிடம் இருந்து பறித்துவிட்டது. அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர், கிராம சேவகர் ஆகியோர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் இருந்தனர்.

மேற்படி சட்டம் அவர்களை மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாற்றிவிட்டது. அவர்கள் தான் பணத்தைத் திருப்பி அனுப்பி வந்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.

அதாவது மத்திய அரசாங்கத்தின் அலுவலர்களே எமக்கு உதவி புரிவதாக காட்டிக் கொண்டு எம் சார்பில் செலவிடவேண்டியிருந்த பணத்தை மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும்.

அதைப் பிரதமர் அவர்களே பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அபாண்டமாக எம்மேல் பழி போடுவதை அவர் நிறுத்த வேண்டும். அவரின் புரிதலுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன்.

2016ம் ஆண்டில் முழு இலங்கையிலும் இருக்கும் 850க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஆகியவற்றில் சிறந்த நிதி நிர்வாகத்திற்காக எனது முதலமைச்சர் அமைச்சுதான் முதற் பரிசைப் பெற்றது.

பிரதமரின் அமைச்சேதேனும் அவ்வாறு எப்பவென்றாலும் பரிசு பெற்றதோ என்பதை அவர்தான் கூற வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கோட்டாபயவின் அதிரடி உத்தரவால் பல கிராமசேவகர்கள் சிக்கினர்!

Next Post

சஜித் அணி படுதோல்வியடையும்!

Editor

Editor

Related Posts

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்
இலங்கைச் செய்திகள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு
இலங்கைச் செய்திகள்

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி
இலங்கைச் செய்திகள்

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை
இலங்கைச் செய்திகள்

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
Next Post
சஜித் அணி படுதோல்வியடையும்!

சஜித் அணி படுதோல்வியடையும்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025

Recent News

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy