தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த ஒரு செயல்பாடையும் செய்யப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மாறாக எங்கள் மக்களுக்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு கிடைக்கக்கூடிய நிரந்தரமான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல விடயங்களுக்காக எங்கள் கூட்டணி எதிர்காலத்தில் கொள்ளை ரீதியில் மக்களுக்காக உழைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மக்கள் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.
இச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆட்சிக் காலத்தில் கூட்டமைப்பில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாவலி எல் வலயத்திற்கும், பௌத்த விகாரைகள் அமைப்பதற்கும் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.