யுத்தத்தின் போது இறந்ததாக, காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் தமிழர்கள் ஐரோப்பிய புலம்பெயர் தேசங்களில் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர் எனக் கூறப்படும் பெரும்பாலானோர் இன்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு இறந்தவர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் என கூறப்படுபவர்கள் ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருவதோடு, இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஐ.நா. அமர்வு இடம்பெறும் போது இதுபோன்ற நபர்கள் ஐரோப்பா நாடுகளில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்கிறார்கள்.
இப்படியான புலம்பெயர்ந்தவர்களின் விபரங்களை நாம் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோரியிருந்தும், இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
எனவே, காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தின் போது இறந்தவர்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டுமெனில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் தகவல்களை எமக்கு வழங்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.