இலங்கையில் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்களை வாங்குவதில் மக்கள் அதிக கவனம் செலுத்தும் நிலையில் தற்போது இந்த நிலைமை சுவிஸ் நாட்டிலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகில் உள்ள அனைத்து தமிழர்கள் இடத்திலும் கொரோனா வைரஸால் இந்த பதற்ற நிலை காணப்படுவதாக உள்ளது.
இதேவேளை சுவிஸில் பல்பொருள் அங்காடிகள் (Food City) மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் அத்தியாவசிய உணவுப்பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்களை அதிகளவில் வாங்குவதில் நுகர்வோர் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் சுவிஸில் சாப்பாட்டு பொருள்கள் மீதுதான் அதிக அளவு கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் சாப்பாட்டு பொருள்கள் கடைகளில் முடிவடைந்த நிலையில் சுவிஸ் மக்கள் பெரும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
குழந்தைகளுக்கான பால்மா உள்ளிட்ட பால்மா வகைகள், பிஸ்கட்டுகள், சீனி, மா, அரிசி உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் அதிகளவில் கொள்வனவு செய்வதாக சுவிஸ் பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சத்தில் சுவிஸ் உள்ள அனைத்து அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் இருக்கும் கடையில் மக்கள் சென்று பொருள்களை வாங்கி முற்றிலும் காலி செய்துள்ளனர்.
இதனால் கடைகளில் காகிதம், பாஸ்தா, தண்ணீர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் எதும் இல்லையென சுவிஸ் மக்களிடம் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்கள் பெருபாலும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் பொருள்கள் எவையும் தற்போது சுவிஸ் கடைகளில் காணப்படவில்லை. அனைத்தையும் மக்கள் வாங்கி சென்றுள்ளதாக கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடைகளுக்கு வரும் மக்களிடமும் பொருள்கள் எவையும் இல்லையென பல முறை கடைகளில் காசாளர் தெரிவித்துள்ளனர்.