உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸினால் 3 லட்சத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில், இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது.
கடைகள், உணவகங்கள், பொதுப்போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இன்று நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பினால் 7 பேர் ஆன நிலையில், தற்போது அமலில் இருக்கும் சுய ஊரடங்கை நீடித்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. நாளை காலை 5 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.