கொரோனா வைரஸ் குறித்து அறிந்து கொண்ட பாட்டி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்தியாவில் கூட கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1000ஐத் தொடவுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் ஷிரோலி பகுதியை சேர்ந்த மலுபாய் அக்ரம் அவாலி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
செக்யூரிடியாக வேலை செய்து வரும் மலுபாயின் மகன் ஊரடங்கு உத்தரவால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
ஏன் வேலைக்கு செல்லவில்லை என மகனை பார்த்து மலுபாய் கேள்வி எழுப்ப, கொரோனா பற்றி பேரன் விளக்கியுள்ளார்.
இதனை கேட்டதும் மன உளைச்சலுக்கு ஆளான மலுபாய், பயத்தில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
விவரம் அறிந்ததும் விரைந்து சென்ற பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.