மட்டக்களப்பு, மண்டூர் பிரதேசத்தில் பப்பாசி மரம் சிறுவன் மீது சரிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மண்டூர் பலாச்சோலையைச் சேர்ந்த 10 வயதுடைய ரவிக்குமார் யபேஸ் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்திலுள்ள தமது வீட்டின் பகுதியில் இருந்த பப்பாசி மரம் ஒன்றை கடந்த 25ஆம் திகதி உயிரிழந்த சிறுவன் தனது 13 வயது சகோதரனுடன் சேர்ந்து வெட்டி வீழ்த்துவதற்கு முயற்சித்துள்ளனர்.
இதன்போது 13 வயது சகோதரன் அந்த மரத்தில் கயிற்றைக் கட்டி கீழே வீழ்த்துவதற்கு கயிற்றை இழுத்துக் கொண்டார்.
இதன்போது உயிரிழந்த சிறுவன் கோடரியால் மரத்தை வெட்டும் போது மரம் சரிந்து சிறுவனின் தலையில் வீழ்ந்ததையடுத்து படுகாயடைந்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.