தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை ஏவலனார்சூர்கோட்டை புத்தூர் பகுதியை சார்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவியின் பெயர் தேவி (வயது 23). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகும் நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில், வீட்டில் சம்பவத்தன்று தனியாக இருந்த தேவி, விஷத்தினை குடித்து மயங்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். இவரை மயக்க நிலையில் கண்ட அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த சமயத்தில், இவரது உடல்நலம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவரை மீட்டு சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் தேவியின் தாய் புகார் அளிக்கவே, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் ஸ்கொயத்தை ஏற்படுத்தியுள்ளது.